Monday, November 26, 2018

கார்மல் பள்ளியில் தேசிய மாணவர் படை தினவிழா

 கார்மல் பள்ளியில் தேசிய மாணவர் படை தின விழா:
------------------------------------------------------------
          நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை தினவிழா நடைபெற்றது.மாணவர்கள் இறைவணக்கம் பாட NCC  மாணவர் ஆன்றோ  ரோகன் 
அனைவரையும் வரவேற்றார் .II TN BN NCC கமாண்டர் திரு.சிந்து அவர்கள் தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செய்தார்கள்.
கார்மல் NCC இயக்குநர் திரு.M.அருள் ராஜன் தனது உரையில்...
   "நமது கார்மல் தேசிய மாணவர் படைவீர்ர்கள் செல்லும் இடமெல்லாம் சிறப்பு எய்திவருகின்றனர்.இந்திய அளவில் 1948 ஆம் ஆண்டு NCC தோற்றுவிக்கப்பட்டது.இது 71 வது ஆண்டுவிழா.1999 ஆம் ஆண்டு அருட்திரு.மரிய சிகாமணி சே.ச. அவர்களது முயற்சியால் தொடங்கப்பட்டது. தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக பதினொரு மாணவர்கள்  டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில்  கலந்துகொண்டு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
2004 - இல் அகஸ் பிரபு;
2005 -இல் மிலார்டு 
2006 -இல் ராஜ் கபில் மற்றும்
           - அஜின் போஸ்கோ;
2008-இல் அருள் செல்வம்,
2010 -இல் P.தீபன்;
2012 -இல் B.ஜெர்சன் ராஜ்;
2014 -இல் A.ஸ்டானி ஜானுவெல்;
           -  அபோத் கில்லர்;
2016 -இல் ஜாவாஸ் நவீன்;
           - அபிஷ் லால்.
இத்துடன் மாவட்ட அளவில் ஆண்டுதோறும் நடைபெறும் பயிற்சி முகாமில் சிறந்த வீரர்,
சிறந்த பள்ளி,குழுப்போட்டிகள் என பல பரிசுகளை பெற்று அனைவரது பாராட்டைப் பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்து வருகின்றனர்.
நமது மாணவர்கள் எந்த பயிற்சி முகாமுக்குச் சென்றாலும் தனிமுத்திரை பதித்து பரிசுடனே திரும்புவர் . இது கார்மலுக்கே உரிய தனிப்பண்பு! இதில் NCC யும் தனி அடையாளத்தை நமது மாவட்டத்தில் பதித்து பாராட்டு பெற்று வருவது சிறப்புக்குரியது!
வேறு இடங்களில் இல்லாத அளவு நமது NCC மாணவர்களுக்கு இதுவரை பல லட்சம் உதவித்தொகையை பெற்றுத்தந்துள்ளோம்.
இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரிகளிலும்,
பணியிடங்களிலும் சிறந்து விளங்குவதே இந்த பயிற்சிக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகின்றேன். ஒரு மாணவன் சிறந்த குடிமகனாக மாறவேண்டும் என்றால் வீட்டிலும்,பள்ளியிலும் ,சமுதாயத்திலும் நல்ல குடிமகனாக இருக்க வேண்டும்.அப்போதுதான் தேசத்தின் குடிமகனாக வாழமுடியும்.பார்போற்றும் நல்ல குடிமகனாக திகழ உங்களை வாழ்த்துகின்றேன்!"
   என்று கூறினார்.
அதன்பின் பேசிய தலைமையாசிரியர் தந்தை அவர்களும்,தாளாளர் தந்தை அவர்களும் பள்ளியில் செயல்படும் இயக்கங்களில் சிறந்த இயக்கம்,அனைத்து நிகழ்வுகளையும் முன்னின்று செய்யும் இயக்கம் என்று புகழாரம் சூட்டினர்.
   நிறைவாக மாணவர் மணிக்குமார் நன்றி கூறினார். NCC மாணவர்கள் சுகின், ராபின் ஆகியோர் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினர்.

Saturday, November 24, 2018

கார்மல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கார்மல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கார்மல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி:
-------------------------------------------------
    நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி 24.11.18,சனிக்கிழமை அன்று நடைபெற்றது.மாணவர்கள் இறைவணக்கப் பாடல் பாட
ஆசிரியர் திரு.M.இஞ்ஞாசி ராஜா
அனைவரையும் வரவேற்றார்.
பள்ளித் தலைமையாசிரியர் அருட்பணி.A.வில்சன் சே.ச. தலைமையுரையாற்றினார்.
தாளாளர் அருட்பணி.A.சேவியர் ராஜ் சே.ச. ஆசியுரை வழங்கினார்.
முக்கூடல் மத்திய மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் A.ஆல்பர்ட் கிங்ஸ் பெர்னட் சிறப்புரையாற்றினார்.ஆசிரியர் திரு.L.பினு மோன் நன்றி கூறினார்.ஆசிரியர் திரு..M.சந்தியாகு நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
மாணவர்கள் 235 வகையான அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி வைத்திருந்தனர்.
 கார்மல் அறிவியல் மன்ற தலைவர் ஆசிரியர். திரு.பாபு சைமன் தலைமையில்  அறிவியல் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tuesday, November 13, 2018

கார்மல் மாணவன் தடகளப் போட்டியில் சாதனை.

வாழ்த்துகள் கார்மலின் உசேன் போல்ட்!
--------------------------------------------------------
நண்பர்களே கடலூர்மாவட்டம் நெய்வேலியில் நடைபெற்ற 2018-19 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான 61-ஆவது குடியரசு தின விழா தடகளப் போட்டியில் நமது கார்மல் மேல்நிலைப்பள்ளி மாணவர் P. அசதுல்லா முஜாகித் (XII-A) அவர்கள் 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் மும்முறை தாண்டலில் (Trible Jumb)
15.42 மீ. தாண்டி தங்கப் பதக்கமும் 
 புதிய சாதனையையும் படைத்துள்ளார்.
          மேலும் 100 மீ.விரைவு ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்று நமது பள்ளிக்கும் நமது மாவட்டத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார். 
   இதற்காக பாரட்டப்பட வேண்டியது மாணவனையும்,அவனது தந்தையையும் என்றாலும் பெரிதும் பாரட்டப்பட வேண்டியவர் உடற்கல்வி ஆசிரியர் நண்பர் சுரேஷ் பாபு ஆவார்.அசதுல்லாவின் திறமையை அவன் 6-ஆம் வகுப்பு படிக்கும் போதே கண்ணுற்று அனவனுக்கு பள்ளி வளாகத்திலும் ,அண்ணா விளையாட்டு அரங்கிலும் தனியாக ஒருநாளைக்கு சுமார. 2-3  மணி நேரங்களாவது பயிற்சியளித்து ஐந்து ஆண்டுகளில் வார்த.தெடுத்துள்ளார். பத்தாம் வகுப்பு படிக்கும் போது சாதனை செய்திட வேண்டியது...செய்முறை தேர்வினால் அது இயலாது போனதை தற்போது சாதித்துக் காட்டியுள்ளார். சிறந்தமுறையில. பயிற்சியளிக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள்,பள்ளியை நிர்வகித்துவரும் இயேசு சபை குருக்கள் ,ஆசிரியர்களின் முயற்சியால் வருங்காலங்களிலும் அசதுல்லாக்கள் தொடர்வார்கள்...
என வாழ்த்துவோம்.
    நாட்டின் நாளைய நம்பிக்கைகளை உருவாக்கிவரும் கார்மல் கலைமனை வாழ்க! வாழ்க!
#காண்க:https://youtu.be/v8VsMYRg4q0