Thursday, December 20, 2018

கார்மல் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா

கார்மல் பள்ளியில் ஆசிரியர் அலுவலர்களுக்கான கிறிஸ்மஸ் விழா:
--------------------------------------------------
  நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளியில் இயேசு சபை நிர்வாகம் சார்பாக அனைத்து வளாகப் பணியாளர்களும் இணைந்து கொண்டாடிய கிறிஸ்மஸ் விழா 20.12.18 அன்று மாலை 6.00 மணிக்கு பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
கார்மல் இசைக் குழு இறைவணக்கம் பாட ஆசிரியர் திரு.D.டேவிட் ராஜ்  அனைவரையும் வரவேற்றார்.அலுவலகப்
பணியாளர் திருமதி C.கலா இறைவார்த்தையை வாசிக்க அருட்பணி.S.மரிய சிங்க ராயர் சே.ச.குடிலை அர்ச்த்தார்.தாளாளர் மற்றும் இல்லத்தலைவர் அருட்பணி.A.சேவியர் ராஜ் சே.ச. ஆசியுரை வழங்க,திருமதி சாந்தி இன்னிசைப் பாட திரு.S.பிரேம் தாஸ் கிறிஸ்துமஸ் செய்தியை வழங்கினார்.
   அனந்தன்நகர் புனித ஜெரோம் கல்லூரியின் தாளாளர் அருட்பணி A.சுவக்கீன் அவர்கள் கிறிஸ்த்து பிறப்பு பெருவிழாவின் சிறப்புரையாற்றினார்.அருட்சகோ.தேவதாஸ் சே.ச. அவர்கள் கேக் வெட்டி இனிப்பு அனைவருக்கும் பகிர்ந்தளித்தார்.ஆசிரியர் திரு.ஜெயபால் தலைமையில் "சமத்துவம் சங்கமாகட்டும் "
என்ற நாடகம் நடத்தப்பட்டது.தலைமையாசிரியர் அருட்பணி A.வில்சன் சே.ச.அவர்கள் அருளுரை வழங்க அனைவருக்கும் கிறிஸ்துமஸ் பரிசு வழங்கப்பட்டன. ஆசிரியர் அலுவலர் செயலர் திரு.Y.ஜார்ஜ் பிராங்க்ளின் சுதர் நன்றி கூறினார்.ஆசிரியர் திரு.S.பாபு சைமன் ராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இனிய கிறிஸ்துமஸ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!