Monday, June 25, 2018

கார்மல் பள்ளியில் கலைவார தொடக்கவிழா-2018

கார்மலில் கலைவார தொடக்க விழா-2018
-------------------------------------------------------------
ஆசிரியர் திரு.ஜெயபால் அவர்களின் சிறப்புரை
  1. கார்மல் பள்ளியில் இன்று 
நடைபெற்ற நான்காவது பள்ளிப் பேரவை கலைவாரம் தொடக்க விழா பள்ளிப் பேரவையாக நடைபெற்றது.
கூடுதல் உதவித் தலைமையாசிரியர் 
திரு.ஜெரால்டு ராய் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.முதுகலை தமிழாசிரியர் திரு.Sjeyabal
அவர்கள் கலையின் முக்கியத்துவம் மற்றும் கலைவார விழா நடைமுறைகளை எடுத்துரைத்தார்.
தலைமை தாங்கிய பள்ளித் தலைமையாசிரியர் அருட்பணி.ஆ.வில்சன் சே.ச. அவர்கள்பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பரிசுவழங்கி பாராட்டிப் பேசினார்.
நாட்டுப்பண் பாட பேரவை நிறைவுற்றது.
25.06.2018.
திங்கள் . 9.00 AM.

கூடுதல் உதவித் தலைமையாசிரியர் திரு.ஜெரால்டு ராய் அவர்கள் கொடியேற்று சிறப்பு செய்கின்றார்.
கலை விழா பலூன் பறக்கவிடப்படுகிறது.



Wednesday, June 13, 2018

கார்மல் பள்ளியில்சுற்றுச் சூழல் தினவிழா

உலக சுற்றுச்சூழல் தின விழா:
---------------------------------------------------
13.06.2018.
நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டுவரும் பசுமைப் படை அமைப்பின் சார்பாக 
உலக சுற்றுச்சூழல் தினவிழா மற்றும் உலக கடல் நாள் விழா கொண்டாடப்பட்டது.பசுமைப்படை மாணவர் ததிவ்யன் வரவேற்புரையாற்றினார்.தலைமையாசிரியர் அருட்பணி A.வில்சன் சே.ச. தேசியக் கொடி ஏற்றிவைத்து வைத்து தலைமையுரையாற்றினார்.
ஆசிரியர் திரு.J.A.டோமினிக் ராஜ் உலக சுற்றுச்சூழல் பற்றி சிறப்புரையாற்றினார்.
"மரமே நமது வரமே" என்ற 
தலைப்பில் நாடகம் நடத்தினர்.
இயற்கை வாழ்த்துப்பாடல் பாடினர்.மாணவர் D.ஆகாஷ் நன்றி கூறினார். மாணவர்கள. S.பரத்வாஜ், J.அஜின் குமார் ஆகியோர் நிகழ்வைத் தொகுதுத்து வழங்கினர்.பசுமைப்படை 
வழிகாட்டி ஆசிரியர்கள் திரு.த
N.அருள் ராஜ், திரு.ஜெரோம் கோபிநாத் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.நாட்டுப்பண்ணுடன் நிகழ்வு நிறைவடைந்தது.

Wednesday, June 6, 2018

கார்மல் பள்ளிப் பேரவை

கார்மல் பள்ளிப் பேரவை:
💐💐💐💐💐
நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளியில் இந்தக் கல்வியாண்டின்முதல் பள்ளிப் பேரவை தலைமையாசிரியர் அருட்தந்தை. ஆ.வில்சன் சே.ச. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தாளாளர் அருட்பணி.சேவியர் ராஜ. சே.ச. கொடியேற்றிவைத்து புதிய தலைமையாசிரியரை அறிமுகப்படுத்தி வாழ்த்திப் பேசினார்.பள்ளியின் கூடுதல் உதவித்தலைமையாசிரியர்களான...
மேல்நிலைப் பள்ளி திரு.ஜெரால்டு ராய் அவர்களையும்,உயர்நிலைப்பள்ளியில் திரு.ஜாண் உபால்டு மற்றும் நடுநிலைப்பிரிவுக்கு திரு.அமல்ராஜ் அவர்களையும் மாணவர்களுக்கு அறிமுகம்  செய்துவைத்து உரையாற்றினார்.ஆசிரியர் திரு.ஜெலாஸ்டின் அவர்கள் நிகழ்வை நெறிப்படுத்தினார்.

Friday, June 1, 2018

கார்மல் பள்ளி...புதிய கல்வியாண்டு தொடக்கம்


Friday, June 1, 2018

பள்ளி தொடக்க நாள்

கார்மல் பள்ளியில் இன்று 01/06/2018 வெள்ளி முதல் நாள் புதிய கல்வியாண்டின் தொடக்க நாள் ஆரம்பமானது.
பள்ளியன் புதிய தலைமையாசிரியர் அருட்பணி A.வில்சன் சே.ச.
அவர்கள பொறுப்பேற்றுள்ளார். தாளாளர் , இல்ல அதிபர் ,உதவித்தலைமையாசிரியர் ஆகிய பொறுப்பை அருட்பணி A.சேவியர் ராஜ் சே.ச அவர்கள் ஏற்றுள்ளார்கள்.
ஆசிரியர்களுக்கு பள்ளிக் கையேடு, பாடக் குறிப்பேடு நோட்டுகளை வழங்கி இந்த கல்வியாண்டு இனிதாக நடைபெற வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
மாணவர்களுக்கு புதிய பாடநூல்கள் வழங்கப்பட்டன.
இந்த நாள் இனிய நாள்!

No comments:


பள்ளி தொடக்க நாள்

கார்மல் பள்ளியில் இன்று 01/06/2018 வெள்ளி முதல் நாள் புதிய கல்வியாண்டின் தொடக்க நாள் ஆரம்பமானது.
பள்ளியன் புதிய தலைமையாசிரியர் அருட்பணி A.வில்சன் சே.ச.
அவர்கள பொறுப்பேற்றுள்ளார். தாளாளர் , இல்ல அதிபர் ,உதவித்தலைமையாசிரியர் ஆகிய பொறுப்பை அருட்பணி A.சேவியர் ராஜ் சே.ச அவர்கள் ஏற்றுள்ளார்கள்.
ஆசிரியர்களுக்கு பள்ளிக் கையேடு, பாடக் குறிப்பேடு நோட்டுகளை வழங்கி இந்த கல்வியாண்டு இனிதாக நடைபெற வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.
மாணவர்களுக்கு புதிய பாடநூல்கள் வழங்கப்பட்டன.
இந்த நாள் இனிய நாள்!