Sunday, December 4, 2022

கார்மல் பள்ளி NCC மாணவர்கள் கடற்கரையை தூய்மை செய்யும் செயல்பாடு

கடற்கரை தூய்மை பணியில் கார்மல் பள்ளி என. சி. சி. மாணவர்கள்.
_____________________
நாகர்கோவில் டிச. 04:
சர்வதேச கடற்கரை பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் மைய அரசின் சார்பில் தேசிய மாணவர்
 படையினருக்கு  
" புனித் சாகர் அபியான்" என்ற பெயரில் “தூய்மையான கடற்கரை - நெகிழி குப்பைகள் இல்லா கடல்” என்ற தலைப்பில் கடற்கரைதூய்மைப் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


கார்மல் மேல்நிலைப்பள்ளி என்சிசி மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை மரிய பாஸ்டின் துரை சே. ச. அவர்கள் வழிகாட்டுதலில் என்.சி.சி இயக்குனர் அருள்ராஜன் அவர்கள் நூறு என்.சி.சி.மாணவர்களை அழைத்துக் கொண்டு மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சியில் உள்ள சுற்றுலா தலமான சங்குத்துறை கடற்கரை பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். கார்மல் பள்ளி என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் ரெக்ஸ் அனைவரையும் வரவேற்றார். அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் லெஸ்லி , கார்மல் பள்ளி உதவித் தலைமையாசிரியர் அருட்தந்தை யேசு நேசம் சே. ச.ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணை தலைவர் டோமினிக்ராஜ் கடற்கரையின் தூய்மைகள் குறித்து எடுத்துரைத்தார்.
 அறிவியல இயக்கத்தின் ராஜாக்கமங்கல ஒன்றிய தலைவர் தாமோதரன் மாணவர்களுக்கு நெகிழி பொருட்களின் தீமைகள் குறித்து எளிய செயல்பாடுகள் மூலம் எடுத்துரைத்தார். பின்பு மாணவர்கள் கடற்கரை பகுதிகளில் உள்ள மக்கும் குப்பை மக்காத குப்பைகளை சேகரித்து அவற்றை தரம் பிரித்து உரிய குப்பை தொட்டிகளில் போட்டனர். 
நிகழ்வில் ஆசிரியர் மகிபன், புத்தன்துறை பங்கு பேரவை உறுப்பினர் சேவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர். என். சி. சி. இயக்குனர் அருள்ராஜன் நன்றி கூறினார்.

Friday, December 2, 2022

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கார்மல் பள்ளி மாணவர்கள் இளம் விஞ்ஞானியாகத் தேர்வு.

வாழ்த்துகள் கார்மல் பள்ளி இளம் விஞ்ஞானிகளே!
🌹🌹

 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும்
இந்திய அறிவியல் தொழில்நுட்ப குழுமம் இணைந்து நடத்தும் 30- ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு,  நாகர்கோயில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் வைத்து நடைபெற்றது.
இதில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிகளை சார்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தனர். நாகர்கோயில் கார்மல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தலைமையாசிரியர் அருட்தந்தை மரிய பாஸ்டின் துரை சே.ச. அனுமதியுடன் ஆசிரியர் திரு. இஞ்ஞாசி ராஜா அவர்கள் வழிகாட்டலில் மாணவர்கள் அஸ்வின் லிபின், அஸான் ரோசிக் சைன் ஆகியோர்,  "நாகர்கோவில் பகுதிகளில் மறைக்கப்பட்ட பாரம்பரிய விளையாட்டுகளும் அதனை  மாணவர்களிடம் எடுத்துச் செல்லுதலும்" என்ற தலைப்பிலும்
ஆசிரியர் திரு.சந்தியாகு அவர்கள் வழிகாட்டலில் மாணவர்கள் பிரின்ஸ் நிகிலன், டேனிஷ் புருனோ ஆகியோர் " பள்ளி , மருத்துவமனை, வழிபாட்டுத்தலங்கள் முன்பு நடைபெறும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தும் முறை " என்ற  தலைப்பிலும், ஆசிரியர்  பிரிசிலிட்டி வழிகாட்டலில் மாணவர் விஷ்ணு  " நீர் சிக்கன முறையில் மூலிகைகள் மற்றும்  கீரைகள் வளர்ப்போம் பயனறிவோம்"  என்ற தலைப்பிலும் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர். இதில் பிரின்ஸ் நிகிலன் தலைமையில் தயாரித்த   "பள்ளி மருத்துவமனை வழிபாட்டு தலங்கள் முன்பு நடைபெறும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தும் முறை"  என்ற ஆய்வறிக்கை மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் கோவில்பட்டியில் டிசம்பர் 10,11 ஆகிய நாட்களில்  நடைபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களையும் காட்டி ஆசிரியர்களையும் பள்ளித் தாளாளர் , தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் அலுவலர் செயலாளர்  திரு. பபிலன் ஆசிரியர்கள் மாணவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து பாராட்டினர்.
🤝தமிழ் முரசு செய்தி.