Sunday, December 4, 2022

கார்மல் பள்ளி NCC மாணவர்கள் கடற்கரையை தூய்மை செய்யும் செயல்பாடு

கடற்கரை தூய்மை பணியில் கார்மல் பள்ளி என. சி. சி. மாணவர்கள்.
_____________________
நாகர்கோவில் டிச. 04:
சர்வதேச கடற்கரை பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் மைய அரசின் சார்பில் தேசிய மாணவர்
 படையினருக்கு  
" புனித் சாகர் அபியான்" என்ற பெயரில் “தூய்மையான கடற்கரை - நெகிழி குப்பைகள் இல்லா கடல்” என்ற தலைப்பில் கடற்கரைதூய்மைப் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


கார்மல் மேல்நிலைப்பள்ளி என்சிசி மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை மரிய பாஸ்டின் துரை சே. ச. அவர்கள் வழிகாட்டுதலில் என்.சி.சி இயக்குனர் அருள்ராஜன் அவர்கள் நூறு என்.சி.சி.மாணவர்களை அழைத்துக் கொண்டு மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சியில் உள்ள சுற்றுலா தலமான சங்குத்துறை கடற்கரை பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். கார்மல் பள்ளி என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் ரெக்ஸ் அனைவரையும் வரவேற்றார். அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் லெஸ்லி , கார்மல் பள்ளி உதவித் தலைமையாசிரியர் அருட்தந்தை யேசு நேசம் சே. ச.ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணை தலைவர் டோமினிக்ராஜ் கடற்கரையின் தூய்மைகள் குறித்து எடுத்துரைத்தார்.
 அறிவியல இயக்கத்தின் ராஜாக்கமங்கல ஒன்றிய தலைவர் தாமோதரன் மாணவர்களுக்கு நெகிழி பொருட்களின் தீமைகள் குறித்து எளிய செயல்பாடுகள் மூலம் எடுத்துரைத்தார். பின்பு மாணவர்கள் கடற்கரை பகுதிகளில் உள்ள மக்கும் குப்பை மக்காத குப்பைகளை சேகரித்து அவற்றை தரம் பிரித்து உரிய குப்பை தொட்டிகளில் போட்டனர். 
நிகழ்வில் ஆசிரியர் மகிபன், புத்தன்துறை பங்கு பேரவை உறுப்பினர் சேவியர் உட்பட பலர் கலந்து கொண்டனர். என். சி. சி. இயக்குனர் அருள்ராஜன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment