Friday, October 28, 2022

கார்மல் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா அறிவியல் கண்காட்சி. 28.10.2022

கார்மல் மேல்நிலைப் பள்ளியில் நூற்றாண்டு விழா அறிவியல் கண்காட்சி
28.10.2022.
-----------------------
நாகர்கோவில் அக்.: 28
நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட ,ஆசிரியர் திரு. பினு மோன்  அனைவரையும் வரவேற்றார். அறிவியல் கண்காட்சியின் தொடக்க நிகழ்வாக குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கார்மல் பள்ளியின் தாளாளரும் இல்ல அதிபருமான  அருட்திரு.ஜெரோம் சே.ச அவர்கள் ஆசியுரை வழங்கினார்.

 கார்மல் பள்ளியின் மேனாள் உதவித் தலைமை ஆசிரியர் திரு. ஜெரோம் சேவியர் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களிடம், " அறிவியல் மனப்பான்மை உருவாக வேண்டும் , மாணவப் பருவத்திலேயே படைப்பாற்றல் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்; விஞ்ஞானிகள் எல்லாம் சிறுவயதில் கேள்வி கேட்டு அறிவை  வளர்த்திருந்தனர். அது போல மாணவர்களும் கேள்வி கேட்டுப் பழக வேண்டும். அதுதான் அறிவின் தொடக்கம்.' என்று சிறப்புரையாற்றினார். பள்ளித்தலைமை ஆசிரியர் அருட்திரு மரிய பாஸ்டின் துரை சே.ச. அவர்கள் தலைமை உரையாற்றினார். உதவி தலைமை ஆசிரியர் அருட்திரு.ஜேசு  நேசம் சே.ச,  அவர்கள் அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தும்  முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.


கூடுதல் உதவித்தலைமையாசிரியர்கள் திரு.ஜெரோம், திரு.ஜாண் உபால்டு,திரு.அமல்ராஜ், ஆசிரியர் அலுவலர் செயலர் திரு.பபிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .கார்மல் அறிவியல் கழகத்தின் தலைவர் திரு.பாபு சைமன் ராஜ் நன்றி கூறினார் .ஆசிரியர் திரு. டைட்டஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் பின்பு மாணவர்களுடைய அறிவியல் படைப்பாற்றல் வெளிப்படுத்தக்கூடிய கண்காட்சியை திரு.ஜெரோம் சேவியர் அவர்கள் தொடக்கி வைத்தார்.

நாகர்கோவில் திருச்சிலுவைக்  கல்லூரியைச் சார்ந்த பேராசிரியர்கள் அருட் சகோதரி முனைவர்.செபாஸ்டின் அம்மாள் ,  முனைவர் லெஸ்லி பாத்திமா ,ஜெரோம் கல்லூரி பேராசிரியர் முனைவர் ரதி ஆகியோர் மாணவர்களின் அறிவியல் படைப்புகளை மதிப்பீடு செய்தனர். நிகழ்ச்சிக்கு கார்மல் பள்ளியில் செயல்படும் கார்மல் அறிவியல் கழக பொறுப்பு ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.