Friday, December 2, 2022

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கார்மல் பள்ளி மாணவர்கள் இளம் விஞ்ஞானியாகத் தேர்வு.

வாழ்த்துகள் கார்மல் பள்ளி இளம் விஞ்ஞானிகளே!
🌹🌹

 தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும்
இந்திய அறிவியல் தொழில்நுட்ப குழுமம் இணைந்து நடத்தும் 30- ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு,  நாகர்கோயில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் வைத்து நடைபெற்றது.
இதில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிகளை சார்ந்த மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தனர். நாகர்கோயில் கார்மல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தலைமையாசிரியர் அருட்தந்தை மரிய பாஸ்டின் துரை சே.ச. அனுமதியுடன் ஆசிரியர் திரு. இஞ்ஞாசி ராஜா அவர்கள் வழிகாட்டலில் மாணவர்கள் அஸ்வின் லிபின், அஸான் ரோசிக் சைன் ஆகியோர்,  "நாகர்கோவில் பகுதிகளில் மறைக்கப்பட்ட பாரம்பரிய விளையாட்டுகளும் அதனை  மாணவர்களிடம் எடுத்துச் செல்லுதலும்" என்ற தலைப்பிலும்
ஆசிரியர் திரு.சந்தியாகு அவர்கள் வழிகாட்டலில் மாணவர்கள் பிரின்ஸ் நிகிலன், டேனிஷ் புருனோ ஆகியோர் " பள்ளி , மருத்துவமனை, வழிபாட்டுத்தலங்கள் முன்பு நடைபெறும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தும் முறை " என்ற  தலைப்பிலும், ஆசிரியர்  பிரிசிலிட்டி வழிகாட்டலில் மாணவர் விஷ்ணு  " நீர் சிக்கன முறையில் மூலிகைகள் மற்றும்  கீரைகள் வளர்ப்போம் பயனறிவோம்"  என்ற தலைப்பிலும் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்திருந்தனர். இதில் பிரின்ஸ் நிகிலன் தலைமையில் தயாரித்த   "பள்ளி மருத்துவமனை வழிபாட்டு தலங்கள் முன்பு நடைபெறும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தும் முறை"  என்ற ஆய்வறிக்கை மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டு மாநில அளவில் கோவில்பட்டியில் டிசம்பர் 10,11 ஆகிய நாட்களில்  நடைபெறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களையும் காட்டி ஆசிரியர்களையும் பள்ளித் தாளாளர் , தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் அலுவலர் செயலாளர்  திரு. பபிலன் ஆசிரியர்கள் மாணவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து பாராட்டினர்.
🤝தமிழ் முரசு செய்தி. 

No comments:

Post a Comment